×

மின் ஊழியர்களுக்கு சிம்கார்டு விநியோகம்

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி மாவட்டத்தில் மின்சாரம் தொடர்பான குறைகளை சீர் செய்ய, மின் ஊழியர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டது.தர்மபுரி மின்பகிர்மான வட்டத்தில் தர்மபுரி, தர்மபுரி கிராமம், பென்னாகரம், கடத்தூர், அதியமான்கோட்டை, பொம்மிடி, இருமத்தூர், அரூர் உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன. இந்த மின்நிலையங்கள் வழியாக மாவட்ட முழுவதும் மின்சாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது. 5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த மின் இணைப்புகளை பராமரிக்கவும், கண்காணிக்கவும் 1,200க்கும் மேற்பட்ட ஒயர்மேன் உள்ளிட்ட மின் ஊழியர்கள் உள்ளனர். இந்த ஊழியர்களுக்கு, மின்வாரியம் சார்பில் சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. இலக்கியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களுக்கு சிம்கார்டு வழங்கப்பட்டது. உதவி பொறியாளர் பிருந்தா, போர்மேன் காவரி உள்ளிட்ட மின் ஊழியர்களுக்கு சிம்கார்டு வழங்கினார். இதே போல் ஒவ்வொரு உதவி பொறியாளர் அலுவலகத்தில், சிம்கார்டு மின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து மின்ஊழியர்கள் கூறுகையில், ‘மின்வாரியம் மூலம் வழங்கப்பட்ட சிம்கார்டு, மின்தொடர்பான குறைகள், புகார் வந்தால் விரைவில் நேரில் சென்று மின்சாரம் தொடர்பான குறைகளை சீர் செய்யவே, இந்த சிம்கார்டு வழங்கப்பட்டுள்ளது. மேலதிகாரிகளின் நேரடி பார்வையில் இருக்கவும் இந்த சிம்கார்டு விநியோகிக்கப்பட்டுள்ளது,’ என்றனர்.

Tags : power employees ,
× RELATED பணி நிரந்தரம் கேட்டு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்