×

பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.15:  பாப்பிரெட்டிப்பட்டியில் வேளாண்மை துறை சார்பில், மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டி நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாபுரம் கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் என்பவரது விவசாய தோட்டத்தில், மாவட்ட அளவிலான கரும்பு பயிர் விளைச்சல் போட்டி, வேளாண்மை துறை சார்பில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) சேகர் கலந்து கொண்டார். விவசாயி சார்பாக நடுவராக கோவிந்தனும், வேளாண் துறை நடுவராக அரூர் வேளாண்மை உதவி இயக்குநர் சகாயராஜ் ஆகியோர் போட்டியை நடத்தினர். கரும்பு பயிர் விளைச்சலை மாவட்ட மற்றும் மாநில அளவில் அதிக மகசூல் தரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்மை துறையில் பரிசு வழங்கி போட்டி நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், சுப்பிரமணியசிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர்(பொ) கேசவன், கரும்பு அலுவலர் சரவணன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் அருணன், திருநாவுக்கரசு, சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா