×

காவல்துறை சார்பில் மதுவிலக்கு வழக்கில் சிக்கிய இருசக்கர வாகனங்கள் ஏலம்

தர்மபுரி, பிப்.15: தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 49 இருசக்கர வாகனங்கள் வரும் 20ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இது குறித்து தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 49 இருசக்கர வாகனங்கள் வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு, மாவட்ட எஸ்பி அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் விடப்படும் வாகனங்களை, 20ம் தேதி காலை 8 மணி முதல் பார்வையிடலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அப்பொழுதே முழு தொகையையும், வரியுடன் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கூடுதல் எஸ்பியை 04342-262581 என்ற எண்ணிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா