×

கரூர் ரயில் நிலையத்தில் ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

கரூர், பிப். 15: கரூர் ரயில்வே காவல் நிலையத்தில் ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு நேற்று மதியம் ரயில்வே துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, வழக்குகளின் விவரம், தேங்கியுள்ள வழக்குகள், பயணிகள் பாதுகாப்பு குறித்தான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ரயில்வே போலீசாரை சந்தித்து குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, டிஎஸ்பி சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.


Tags : ADGP Cylindrababu ,inspection ,railway station ,Karur ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!