×

மாயனூர் அருகே துணிகரம் மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு

கரூர், பிப். 15: கரூர் மாவட்டம் மாயனூர் அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தாலிச் செயினை பறித்து சென்ற 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம் மாயனூர் அடுத்துள்ள நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). இவர் மாயனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் நேற்றுமுன்தினம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த தனது தாயின் கழுத்தில் கிடந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் தாலிச் செயினை இரண்டு பேர் பைக்கில் வந்து பறித்துச் சென்று விட்டதாக தெரிவித்திருந்தார். போலீசார் மர்ம ஆசா மிகளை தேடி வருகின்றனர்.


Tags : Thalai Chain ,mantota ,diamond ,Meonur ,
× RELATED விகேபுரம் சேனைத்தலைவர் பள்ளி வைர விழா