×

கரூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளலார் நகரில் சா க்கடை வடிகால் இல்லாத அவலம்

கரூர், பிப். 15: கரூர் நகராட்சிக்குட்பட்ட வள்ளலார் நகர் பகுதி முழுவதும் சாக்கடை வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் இருந்து காந்திகிராமம் மற்றும் ஏமூர் செல்லும் சாலையின் மையப்பகுதியில் தெற்கு காந்தி கிராமம் வள்ளலார் நகர், கேகே நகர் போன்ற ஏராளமான நகர்ப்பகுதிகள் உள்ளன. நகராட்சியின் விரிவாக்கப்பகுதியில் ஒன்றாக தெற்கு காந்திகிராமம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஏமூர் செல்லும் சாலை வரை நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. ஆனால் இந்த பகுதியின் பெரும்பாலான தெருக்களில் சாக்கடை வடிகால் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் குடியிருப்போர் அனைவரும் தங்களின் வீடு முன்பே பள்ளம் தோண்டி கழிவுகளை தேக்கி வருவதால் பல்வேறு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நகராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும் சாக்கடை வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு சாக்கடை வடிகால் வசதி கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Vallalar ,Karur Municipality ,
× RELATED மாற்று இடத்தில் வள்ளலார் சர்வதேச மையம் டிடிவி கோரிக்கை