×

கஜா புயலால் பாதிப்பு விடுபட்டோருக்கும் நிவாரணம் வழங்க கோரி சாலை மறியல் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் அறிவிப்பு

வேதாரண்யம், பிப்.15: கஜா புயலால் பாதித்த விடுபட்டோருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.வேதாரண்யம் தாலுகா வண்டுவாஞ்சேரியில் திமுக ஊராட்சி சபை கூட்டம் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில்  ஒன்றிய கழக செயலாளர் குமரவேல்,  எம்எல்ஏ காமராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனியப்பன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் துரைராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முருகையன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அருள் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி பாரிபாலன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆசைதம்பி ஊராட்சி செயலாளர் சோழன்நம்பி குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.    

கூட்டத்தில் எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட தென்ணை விவசாயிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இவர்கள் அனைவரும் தோப்பு புறம்போக்கு பகுதியில் தென்ணை விவசாயம் மேற்கொண்டு அரசுக்கு தீர்வை தொகையும் கட்டி வருகிறோம்.  ஆனால் எங்களுக்கு அரசு இதுவரை நிவாரணம் கொடுக்கவில்லை. புயல் பாதித்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் எங்களுக்கு அரசு விதி மற்றும் பல்வேறு நடைமுறைகளை காரணம் காட்டி நிவாரணம் மறுக்கப்படுகிறது. எனவே மற்ற தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கியதுபோல எங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.  இல்லையென்றால் விரையில் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி   பொதுமக்கள்  ஏராளமான மனுக்களை அளித்தனர்.   

Tags : Announcement ,council meeting ,DMK Panchayat ,victims ,
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...