×

அகஸ்தீஸ்வரம், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர்கள் உட்பட குமரியில் 11 தாசில்தார்கள் திடீர் இடமாற்றம் கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில், பிப்.15:  குமரி மாவட்டம் முழுவதும் 11 தாசில்தார்களை திடீரென்று இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பான உத்தரவில் கூறியிருப்பதாவது:குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவில் தனி தாசில்தாராக பணியாற்றி வந்த தாஜ் நிஷா மாவட்ட கலெக்டர் அலுவலக ஊசூர் மேலாளர் (குற்றவியல்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக கண்காணிப்பாளர் ஜெகதா பதவி உயர்வில் மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளார். நாகர்கோவில் சிப்காட் (நிலமெடுப்பு) தனி தாசில்தார் ராஜா அந்த பணியிடம் கலைக்கப்பட்டதால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலங்கை அகதிகள் பிரிவு தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.

 நாகர்கோவில் அரசு கேபிள் டிவி தனி தாசில்தார் இக்னேஷியஸ் சேவியர், நாகர்கோவில் ஆதி திராவிடர் நலம் மற்றும் பத்மநாபபுரம் ஆதி திராவிடர் நலம் (கூடுதல் பொறுப்பு) தனி தாசில்தராக மாற்றப்பட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலக தனி தாசில்தார் சதானந்தன் மாவட்ட வழங்கல் அலுவலக தனி தாசில்தாராகவும் (பறக்கும்படை), மாவட்ட வழங்கல் அலுவலக தனி தாசில்தார் (பறக்கும்படை) ராஜசேகர் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு சிறுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலக தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.  பத்மநாபபுரம் தனி தாசில்தார் (ஆதி திராவிடர் நலம்) ரமேஷ், நாகர்கோவில் அரசு கேபிள் டிவி தனி தாசில்தாராகவும், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தார் சுசீலா, அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலராகவும், அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டியம்மாள், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர். பத்மநாபபுரம் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) தனி தாசில்தார் சுதா விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலராகவும், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் புரந்தரதாஸ் விளவங்கோடு தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



Tags : Agastheeswaram ,Vellavankodu ,Kumari ,
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...