×

கீழ்பென்னாத்தூர் அருகே துணிகரம் லாரி டிரைவரை மிரட்டி ₹20 ஆயிரம், செல்போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை

ேவட்டவலம், பிப்.15: கீழ்பென்னாத்தூர் அருகே லாரி டிரைவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ₹20 ஆயிரம் மற்றும் செல்போனை மர்ம ஆசாமிகள் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அரூர் தாலுகா தீர்த்தமலை குருமபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(32), லாரி டிரைவர். இவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேக்களூர் கிராமத்தில் பனைமர துண்டுகளை லோடு ஏற்றிச்செல்ல நேற்று முன்தினம் மாலை தீர்த்தமலையில் இருந்து புறப்பட்டார்.

இரவு 11 மணியளவில் திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வந்த அவர், லாரியை நிறுத்திவிட்டு அங்குள்ள உணவகத்தில் சாப்பிட்டார். பின்னர், சிறிதுநேரத்தில் லாரியை எடுத்துக்கொண்டு கீழ்பென்னாத்தூர் நோக்கி புறப்பட்டார்.சாலையில் சிறிதுதூரம் சென்றபோது 2 பைக்குகளில் வேகமாக வந்த சுமார் 20 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க 4 பேர், திடீரென லாரியின் குறுக்காக பைக்கை நிறுத்தினர்.

அப்போது, பைக்கில் இருந்து இறங்கிய 4 வாலிபர்களும் லாரிக்குள் ஏறி, டிரைவர் செந்திலின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டனர். தொடர்ந்து அவரது பாக்கெட்டில் இருந்த ₹20 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.இதுகுறித்து, கீழ்பென்னாத்தூர் போலீசில் செந்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Larry Driver ,Keebennannathur ,Debuggi ,
× RELATED மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: லாரி டிரைவர் கைது