வேலூர், பிப்.15: வேலூரில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காத இன்சூரன்ஸ் நிறுவனம் கோர்ட் உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.வேலூர் மூஞ்சூர்பட்டை சேர்ந்தவர் கே.ராமலிங்கம்(54), சப்-இன்ஸ்பெக்டர். இவர் கடந்த 2014ம் ஆண்டு காட்பாடியில் இருந்து பணி முடிந்து காலை வேலூர் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து ராமலிங்கத்தின் மனைவி வரதம்மாள் மற்றும் அவரது 4 மகன்களும் தங்களுக்கு ₹35 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டு வேலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தில் இறந்த ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு ₹18.19 லட்சம் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், இழப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கவில்லை.