பிஆர்டிசி டிரைவர் மீது சரமாரி தாக்குதல்

வில்லியனூர், பிப். 15: வில்லியனூர் அருகே சேந்தநத்தம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவநாதன் (44). இவர் பிஆர்டிசி பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி பேருந்தை ஓட்டி வந்துள்ளார். வில்லியனூர் எம்ஜிஆர் சிலை அருகே பேருந்து வந்தபோது, எதிரே சென்ற இருசக்கர வாகனத்தை வழிவிடுமாறு ஹாரன் அடித்துள்ளார். அப்போது அந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் பேருந்தை வழிமறித்து ஏன் ஹாரன் அடித்தாய் என கேட்டு தேவநாதனை தாக்கியுள்ளனர். இதில் தேவநாதனுக்கு பல் உடைந்தது. இதை தடுக்க சென்ற கண்டக்டரையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.இதுதொடர்பாக தேவநாதன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு கிருபாகரன் ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: