போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி அவசர ஆலோசனை

புதுச்சேரி, பிப். 15:  புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி முதல் தற்போது வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் துணை ராணுவம் பாதுகாப்புடன் கிரண்பேடி சென்னை புறப்பட்டு சென்றார். இருந்தாலும் ஆட்சியாளர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் டிஜிபி சுந்தரி நந்தா அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு போலீசார் துணை ராணுவத்துடன் இணைந்து நகர பகுதி முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே ஹெல்மெட் மீதான கண்காணிப்பை புதுச்சேரி காவல்துறை நேற்று முற்றிலும் நிறுத்தியது. முக்கிய சிந்திப்புகளில் எந்த காவலரும் வண்டி நம்பர்களை குறிப்பெடுக்கும் பணியில் ஈடுபடவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் இப்பணியை தொடர முடியாத நிலையில் காவல்துறை இருப்பதாக கூறப்பட்டது.

Related Stories: