புதுவையிலிருந்து சென்னைக்கு மது கடத்த முயற்சி நபர் கைது

காலாப்பட்டு, பிப். 15: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடியில் மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இங்கு இசிஆர் சாலை வழியாக தினமும் புதுவையிலிருந்து சென்னை செல்லும் வாகனங்களை போலீசார் சோதனை செய்த பிறகு அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது காரின் பின்புறம் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதில் மொத்தம் 22 மதுபாட்டில்கள் இருந்தன. போலீசார் காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமையம் அருகே வெங்களூர் பகுதியை சேர்ந்த பெரியகருப்பன் மகன் பாண்டியன் (39) என்பதும், புதுவையிலிருந்து சென்னைக்கு மது கடத்தி சென்று நண்பர்களுடன் குடிக்க திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து மரக்காணம் கலால்துறையில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக கலால்துறை அதிகாரிகள் பண்டியன் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

Related Stories: