முன்விரோத தகராறில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்

திருக்கோவிலூர், பிப். 15: திருக்கோவிலூர் அருகே வாலிபர் காதை கடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.திருக்கோவிலூர் அடுத்த அந்திலி கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கன் மகன் சிவா (25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் வெங்கடேசன் என்பவருக்கும் வீட்டு வாசலில் கழிவுநீர் செல்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் சவஊர்வலம் சென்ற போது, வெங்கடேசன் சிவாவை இடித்துக்கொண்டு சென்றுள்ளார்.

இதனை தட்டிக்கேட்ட சிவாவை, வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன், காதை கடித்து துப்பியுள்ளார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து சிவா கொடுத்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார், வெங்கடேசன், அவரது நண்பர்கள் சேரன் (19), கபிலன் (16), அமுல்ராஜ் (25) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிந்து சேரன், அமுல்ராஜை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: