×

2 கூரை வீடுகள் எரிந்து நாசம்

உளுந்தூர்பேட்டை, பிப். 15:  உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை நம்பிகுளம் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். நேற்றுமுன்தினம் இரவு இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென அருகில் இருந்த பாபு என்பவரது கூரை வீட்டிற்கும் பரவியது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியதால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையிலான குழுவினர் சென்று ஒரு மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோக பொருட்கள், துணிமணிகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : roof houses ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...