புவனகிரி, பிப். 15: புதுச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ணிக்கொல்லை கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எவ்வித அனுமதியுமின்றி அருகில் உள்ள பரவனாற்றிலிருந்து மணல் திருடி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாட்டு வண்டியை கைப்பற்றிய போலீசார், மணல் கடத்தியதாக மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (42) என்பவரை கைது செய்தனர்.