×

பாம்பு கடித்து விவசாயி பலி

பண்ருட்டி, பிப். 15: பண்ருட்டி அருகே பெரியகள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (75), விவசாயி. இவர் கடந்த 7ம்தேதி தனக்கு சொந்தமான வயலில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி இவரது உறவினர் பாண்டியன் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்