×

அலுவலகத்தில் திருட முயற்சி சிவகாசி, பிப். 14: சிவகாசியில் பட்டாசு ஆலை

அலுவலகத்தில் திருட முயன்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகாசி-விருதுநகர்  மெயின்ரோட்டில் தனியார் மகளிர் கல்லூரி அருகே, பிரபல பட்டாசு ஆலையின் தலைமை  அலுவலகம் உள்ளது. இந்த பட்டாசு ஆலை அலுவலகத்தில் முக்கிய கதவுகள்  உடைக்கப்பட்டு இருந்தது. சம்பவம் குறித்து பட்டாசு ஆலை அலுவலக மேலாளர்  வளையாபதி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். கைரேகை நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா  பதிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Sivakasi ,Fireworks plant ,
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து