அருப்புக்கோட்டை ரயில்நிலையத்தில் கழிப்பறை மூடிக்கிடக்கிறது. நடைபாதை மேடையில் குடிநீர் குழாய்கள் காட்சிப் பொருளாக உள்ளன. நடைமேடையில் கடைசி வரை மின்விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில், ரயிலில் கம்பார்ட்மெண்ட் கண்டுபிடித்து ஏற முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர். நடைமேடையில் கடைசி வரை இருக்கை வசதியும் இல்லை. தற்போது மின்சார ரயில்கள் இயக்குவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. பல வசதிகள் இருந்தும், அருப்புக்கோட்டை வழியாக போதிய ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் தயக்கம் காட்டுகிறது. ரயில் நிலையம் வாக்கிங் செல்லும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.