×

டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஏழரை அடி சாரைப்பாம்பு

போடி, பிப். 14: போடியில் உள்ள டாஸ்மாக் கடையில் புகுந்த ஏழரை அடி சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி கருப்பசாமி கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. நேற்று முன்தினம் கடை ஊழியர் சக்தி கடையை திறந்த போது உள்ளே பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர், போடி தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கராஜன் தலைமையில் விரைந்து வந்த வீரர்கள், டாஸ்மாக் கடையில் ஏழரை அடி நீள சாரைப்பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பாம்பை பிடித்து போடி வனத்துறையிடம் ஒப்படைத்தனர். டாஸ்மாக் கடைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?