×

ஆனைமலை- பழனி ரோட்டில் பாலத்தை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, பிப்.14: உடுமலை அருகே உள்ள குறிச்சிக்கோட்டையில், ஆனைமலை- பழனி ரோட்டில் இருந்த குறுகிய பாலத்தை இடித்துவிட்டு, புதிய அகலமான பாலம் கட்டப்பட்டது. தினசரி இதன் வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், இரவு நேரங்களில் இந்த பாலத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சிலர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்.இதையடுத்து, தற்போது பாலத்தின் இருபுறமும் முள்வேலி போட்டுள்ளனர். இதனால் கழிப்பிடமாக பயன்படுத்துவது நின்றாலும், வாகனங்கள் செல்ல இடையூறாக உள்ளது. பாலத்தை அகலப்படுத்தியும் பயன் இல்லாமல் உள்ளது.இதுபற்றி அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இங்குள்ள சுடுகாடு அருகே பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.ஆனால் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் சிலர் பாலத்தை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பொது கழிப்பிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றனர்.

Tags : Ainamalai-Palani Road ,
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...