காங்கயம், பிப்.14: காங்கயம் பகுதியில் விவசாய நிலத்தில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற விவசாயிகள் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆலோசனைக் கூட்டத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காங்கயம் தாலூக்கா முழுவதும் உள்ள கிராமங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வர், மாவட்ட நிர்வாகம் என அனைத்து வழிகளிலும் பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும் என மனு அளித்தனர். மேலும் போலீசார் மூலம் விவசாயிகளை மிரட்டி நிலத்தில் மின்கோபுரத்தை நட்டு வருகின்றனர். ஆனால் இதற்காக அனுமதி ஏதும் இல்லாமல் அதிகாரிகள் இது போன்று செயல்களில் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காங்கயம் அருகே உள்ள ராமபட்டினம் மற்றும் நிழலிகவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் உயர் மின்கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.