×

ரூ.2.30 லட்சம் மோசடி புகார் பெண் மீது வழக்கு

மண்டபம், பிப்.14: ரூ.2.30 லட்சம் மோசடி புகாரில் கோர்ட் உத்தரவுபடி பெண் மீது, மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
உச்சிப்புளி அருகே சூரன்காட்டு வலசையைச் சேர்ந்த சம்பத் மகள் பிரீத்தி. இவர் மண்டபம் மறவர் தெருவை சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் கடந்த 2016 ஜன. 20ம் தேதி ரூ.2.30 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நான்கு மாதத்திற்குள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்ததாக தெரிகிறது. கால அவகாசம் முடிந்தும் கொடுத்த பணத்தை பழனிவாசகம் பலமுறை கேட்டும் தராமல் பிரீத்தி ஏமாற்றிய கூறப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்தில் பழனிவாசகம் சில மாதங்களுக்கு முன் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்க வில்லை. இது தொடர்பாக ராமேஸ்வரம் ஜே.எம் கோர்ட்டில் பழனிவாசகம் வழங்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி பிரீத்தி மீது மண்டபம் போலீசார் 420 பிரிவு படி மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை