×

கானாட்டாங்குடி கிராமத்தினர் புகார் ஊர்காவல் படையில் சேர நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

ராமநாதபுரம், பிப்.14:  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் காலியாக உள்ள ஆண்கள் 55, பெண்கள் 8 என 63 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்ப எஸ்பி ஓம்பிரகாஷ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதற்கான விண்ணப்பங்களை நாளை (15ம் தேதி) முதல் 21ம் தேதி வரை சேதுபதி விளையாட்டு அரங்கம் பின்புறமுள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்ந்து 23, 24ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படையினர் தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் நல்ல உடற்தகுதி உடையவராகவும், பொதுத்தொண்டு, பொதுச்சேவையில் விருப்பம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிப்பவராக  இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
18 வயதுக்கு மேல் 50 வயதிற்குள் நல்ல உடற்தகுதி கொண்டவராக இருக்க வேண்டும். கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பெறாதவர்களும் இருக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 21ம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாக மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு காவல் துறையினர் மூலமாக 45 நாள் பயிற்சி அளிக்கப்படும். மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் ரூ.2,800 மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kattatangadi ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை