×

தாசில்தாரின் தங்கையை தாக்கிய 2 பேர் கைது

ராமநாதபுரம், பிப்.14:  முதுகுளத்தூர் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவர் நேற்று முன்தினம் ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் தெருவில் புதிதாக கட்டும் வீட்டிற்கு நுழைவு வாயில் நிலை வைக்கும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதில் கலந்து கொள்ள கொடைக்கானலை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவியும், ராஜேஸ்வரியின் தங்கையுமான முனீஸ்வரி (49) வந்துள்ளார். அப்போது வீடு கட்டும் இடப்பிரச்னையில் முன்விரோதம் ஏற்பட்டதில், பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுப்பு மகன் மாரிஸ்வரன், அவரது  மனைவி சத்யா, உறவினர்கள் ஆர்.எஸ்.மடை செந்தில் (29),  ராமநாதபுரம் சிவன்கோவில் தெரு கார்த்திக் (30), செல்வநாதன் மனைவி காளீஸ்வரி ஆகியோர் முனீஸ்வரியை தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில், ராமநாதபுரம் டவுன் போலீசார், 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செந்தில், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

Tags : sister ,Dashildar ,
× RELATED ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சிஸ்டர்’