×

6 வட்டங்களில் நாளை சிறப்பு திட்ட முகாம்

ஊட்டி, பிப். 14: நீலகிாியில் உள்ள 6 வட்டங்களில் நாளை(15ம் தேதி) வருவாய்த்துறை சார்பில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.
 நீலகிாி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் முதியோர் ஓய்வூதிய தொகை, விதவை உதவித்ெதாகை, நலிந்தோர் உதவித்தொகை, உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை மற்றும் வருவாய்த்துைற மூலம் வழங்கப்படும் சான்றுகள், ேரசன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற மக்கள் நல பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
 இதில், அரசுத்துறை சார்ந்த குறைகள் கேட்கப்பட்டு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் பல்வேறு சிறு தொழில் உதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதன்படி நாளை (15ம் தேதி) மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. இதில் ஊட்டி வட்டத்திற்குட்பட்ட ஊட்டி ரூரல், புதுமந்து சமுதாயக் கூடத்திலும், குன்னூர் வட்டத்திற்குட்பட்ட கேத்தி-3, சோகத்தொரை சமுதாய கூடத்திலும், கோத்தகிாி வட்டத்தில் கோத்தகிரி-3, கேர்பெட்டா சமுதாய கூடத்திலும் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது. குந்தா வட்டத்திற்குட்பட்ட முள்ளிகூர், இன்பசாகர் கிராம சமுதாய கூடத்திலும், கூடலூர் வட்டத்தில் பாடந்தொரை-2, புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியிலும், பந்தலூர் வட்டத்தில் நெல்லியாளம்-2, குன்னலாடி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.

Tags : project camp ,
× RELATED என்எஸ்எஸ் திட்ட முகாம்