மதுரை, பிப். 14: மதுரை அருகே அதலையை சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 25க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் நடராஜனிடம் கொடுத்த புகார் மனுவில், ‘பிரதமர் மோடியின் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டத்தில் பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் பெயர் சேக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களை புறக்கணித்து விட்டனர். விவசாய கூலியான எங்களையும் பெயர் பட்டியலில் சேர்க்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கலெக்டர், மதுரை வடக்கு தாலுகா தாசில்தார் விசாரிக்க பரிந்துரை செய்தார்.