நாமக்கல், பிப்.14: நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில் உலக வன நாள், உலகநீர் நாள் குறித்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமை வகித்து பேசினார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார். மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை நிறுவனர் ஸ்டாலின் குணசேகரன், திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியர் மகேஷ்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் யோகலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.