×

புதன் சந்தையில் ஆடுகள் விலை சரிவு

சேந்தமங்கலம், பிப்.14: நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில், நேற்று ஆட்டுச்சந்தை கூடியது. சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான ஆடுகள், குட்டிகள், கிடா விற்பனை கொண்டு வரப்பட்டன. இதனை வாங்க நாமக்கல், சேந்தமங்கலம், எருமப்பட்டி, பவித்திரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். வறட்சி தொடங்கியதால், சுற்றுப்பகுதியிலிருந்து அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இதனால் விலை சரிந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட இறைச்சி ஆடு ₹4,500க்கு விற்பனையானது. இந்த வாரம் ₹4,400க்கு விற்பனையானது. கடந்த வாரம் ₹3,600க்கு விற்பனையான ஆடுகள் இந்த வாரம் ₹3,500க்கு விற்றது. பிறந்து ஒருமாதமே ஆன பெண்குட்டி ஆடு ₹900க்கும், கிடாகுட்டி ₹900க்கும் விற்பனையானது.


Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்