×

அழகாய் பூத்து குலுங்கும் செண்டு மல்லி கார் மோதி நடந்து சென்ற பெண் பலி

பழநி, பிப். 14:பழநியில் கார் மோதியதில் நடந்து சென்ற பெண் பலியானார்.
பழநி டவுன், தெற்கு அண்ணா நகரைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மனைவி மலர்விழி (40). தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணியர் விடுதி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது பழநி நோக்கி வந்த கார் மலர்விழி மீது மோதியது. இதில் தலையில் அடிபட்டு மலர்விழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.


Tags :
× RELATED கோடை காலத்தை சமாளிக்க பண்ணைக்குட்டைகள் அமைக்க விவசாயிகள் ஆர்வம்