×

பாப்பிரெட்டிப்பட்டி அருகே குப்பை தேக்கத்தால் சுகாதார சீர்கேடு

பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.14: பாப்பிரெட்டிப்பட்டி அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வெங்கடசமுத்திரத்தில் இருந்து மோளையானூர் செல்லும் சாலையில் இக்கிராமம் அமைந்துள்ளது. அப்பகுதியில் சேகரமாகும் கட்டிட கழிவுகள் மற்றும் உணவு பொருட்கள், குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்கின்றனர். சிலர் குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கவும், தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என அப்பகுதி மக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : poppytipatti ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தண்ணீரின்றி காய்ந்த தென்னை மரங்கள்