×

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் 15ம் தேதி சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

பெரம்பலூர்,பிப்.14: பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 15ம்தேதி 3வருவாய் கிரா மங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது என்று கலெக்டர் சாந்தா தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தமிழக அரசினால் சிறப்பு முகாம்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச்சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.இந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல் லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமை சான்றிதழ்கள், முதியோர்உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரிடும் மனுக்கள், ஒரேநாளில் தீர்வுகாணக் கூடிய இதர மனுக்கள்மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றையதினமே உடனடியாக பரி சீலிக்கப்பட்டு உரியஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப் புகைச்சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவுசெய்ய இயலாத விண்ணப்பங்க ளுக்கு 30நாட்களுக்குள் பதில் சம்மந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். இதன் படி நாளை (15ம் தேதி) வேப்பந்தட்டை தாலுகாவில் அனுக்கூர், குன்னம் தாலுகாவில் சித்தளி (மேற்கு), ஆலத்தூர் தாலுகாவில் அழகிரிபாளையம் ஆகிய 3 வருவாய் கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.


Tags : revenue villages ,Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி