×

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மினிவேன் பறிமுதல் இருவர் கைது

தரங்கம்பாடி பிப்.14.  நாகை மாவட்டம், திருக்கடையூரில் அனுமதி இல்லாமல் சவுடு மண் எடுத்து வந்த மினி லாரியை பறிமுதல் செய்து 2 பேரை பொறையார் போலீசார் கைது செய்தனர்.பொறையார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு மினிவேனை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதி இல்லாமல் சவுடு மண் எடுத்துவந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வேனை பறிமுதல் செய்தனர்.  மேலும் வேனில் இருந்த அன்னப்பன்பேட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன்(21), அரவிந்தன் (20) ஆகியோரையும் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய வேன் டிரைவர் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...