×

முதலுதவி விழிப்புணர்வு கூட்டம்

கொள்ளிடம், பிப்.14: கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிளைகள் செஞ்சிலுவை சங்கம் சார்பில் முதலுதவி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் வடிவேலன் வரவேற்றார். இளைஞர் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைபாளரும் முதலுதவி பயிற்றுநருமான பாண்டியன் கலந்து கொண்டு முதலுதவி என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். கூட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி சிந்து நன்றி கூறினார்.

Tags : Awareness Meeting ,
× RELATED தென்காசியில் சுகாதார விழிப்புணர்வு கூட்டம்