×

குலசேகரம் மருத்துவமனை முன் மயங்கி விழுந்த தொழிலாளி சாவு

குலசேகரம்,பிப்.14: குலசேகரம் கோட்டூர்கோணம் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டியூஜின் (47). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு இவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவர் நேற்று காலை குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். மருத்துவரை பார்த்து மருந்து வாங்கிவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக மருத்துவமனையை விட்டு வெளியே வந்தவர். மருத்துவமனை முன் பகுதியில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கு நின்றிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மருத்துவர்கள் பார்த்துவிட்டு கிறிஸ்டியூஜின் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் .இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.





Tags : hospital ,Kulasekharan ,
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...