புதுச்சேரி, பிப். 14: புதுவை தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு மேலாண்மை குழு உறுப்பினர் சிவா எம்எல்ஏ., சங்க தலைவர் முத்து ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதுவை தமிழ்ச்சங்க பொன்விழா தமிழ் மாநாடு-2019 வருகிற 16, 17ம் தேதிகளில் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலை பள்ளியில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. முன்னதாக நாளை (15ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு ஏஎப்டி திடலில் இருந்து புறப்படும் மாநாட்டு பேரணியை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.