விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக ஸ்டிரைக்

புதுச்சேரி,  பிப். 14:   புதுச்சேரியில் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை தூர்வார  வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மீன்பிடிக்க  வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று 2வது நாளாக அவர்களின்  ஸ்டிரைக் நீடித்தது. இதனால் விசைப்படகுகள் அனைத்தும் துறைமுகத்தில்  வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.தேங்காய்த்திட்டு  மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும், முகத்துவாரத்தின்  இருபுறங்களிலும் கருங்கற்களை கொட்டி நிரந்தர தீர்வு காண வேண்டும் என  வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: