புதுவை பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கல்

காலாப்பட்டு, பிப். 14:  புதுவை அரசு பொறியியல் கல்லூரியில்,  தனியார் ஐடி நிறுவனத்தில்  பணிபுரிவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.  கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரியும், பேராசிரியருமான இளஞ்செழியன்  வரவேற்றார். கல்லூரி முதல்வர் தனஞ்செழியன் தலைமை தாங்கி பேசுகையில்,  `இந்தியாவின் வளர்ச்சிக்கு ஐடி துறை மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இளம்  பொறியியல் மாணவர்கள் தங்கள் பங்களிப்பை முழு மனதோடு அளிக்க வேண்டும்.  இதுபோல் தொடர்ந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு கல்லூரி  மாணவர்கள் அதிகமாக தேர்வாக வேண்டும்’ என்றார். சென்னை தனியார் ஐடி  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் கோபிநாத் கலந்து கொண்டு, 83  மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட  இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பணி நியமன ஆணை பெற்றவர்கள் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் பணியில் சேர்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: