புதுச்சேரி, பிப். 14: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக சேர்மன் எம்என்ஆர்.பாலன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (பிடிடிசி) 290 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆட்சியில் முறைகேடான பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்பு, கவர்னருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் முறைகேடான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை சீரமைக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு போட்டிருந்தார். அதன்படி சுற்றுலாத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. கடந்த கால ஆட்சியில் நடந்த இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.தற்போது பதவி உயர்வை சீரமைக்க வேண்டும் என்ற நோட்டீஸ் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.