×

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிடிடிசி ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்

புதுச்சேரி, பிப். 14:  புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக சேர்மன் எம்என்ஆர்.பாலன் எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் (பிடிடிசி) 290 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆட்சியில் முறைகேடான பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. இதுகுறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்பு, கவர்னருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் முறைகேடான பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை சீரமைக்க வேண்டும் என கவர்னர் உத்தரவு போட்டிருந்தார். அதன்படி சுற்றுலாத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த உண்மையை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு இருக்கிறது. கடந்த கால ஆட்சியில் நடந்த இந்த முறைகேடுகளுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.தற்போது பதவி உயர்வை சீரமைக்க வேண்டும் என்ற நோட்டீஸ் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை கண்டித்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதேநிலை நீடித்தால் மேலும் ஒரு உத்தரவை செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவோம். ஏற்கனவே முறைகேடாக பதவி உயர்வு பெற்று, அதில் கிடைத்த ஊதியத்தையும் திரும்பப்பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தற்போது சுற்றுலா வளர்ச்சி கழகம் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப பதவிகளை உருவாக்க வேண்டியிருக்கிறது என்பது உண்மை தான். அதனை முறையாக செய்ய
வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு காரணம், நிர்வாக சீர்திருத்த துறையின் பணி விதிகளை மீறி, இல்லாத பதவிகளை உருவாக்கியது தான். எனவே ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர்
கூறினார்.

Tags : BDD ,fight ,
× RELATED எலக்சன் பர்ஸ்ட் லுக் வெளியானது