×

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் கிராம ஊராட்சி பணியாளர்கள் 22ம் தேதி போராட்டம்

முத்துப்பேட்டை, பிப்.14:   திருவாரூர் கலெக்டர்  அலுவலகம் முன்பு கிராம ஊராட்சி பணியாளர்கள்  22ம் தேதி போராட்டம் நடத்துகின்றனர். இதில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இருந்து திரளாக பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர்கள் சங்க கூட்டம்  பொறுப்பாளர்சற்குணம் தலைமையில் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் குமார், ஐயப்பன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சாந்தகுமார், மாவட்ட செயலாளர்தங்கவேல் ஆகியோர் கலந்துகொண்டு சங்க பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் தமிழ்நாடு கிராம ஊராட்சி பணியாளர் சங்க சம்பந்தமாக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் எந்த கூட்டமாக இருந்தாலும் ஒன்றியத்தின் சார்பில் கலந்து கொள்பவர்களுக்கு அன்றைய செலவை சங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்கான தொகையை சங்கத்தில் இருந்து வழங்க வேண்டும், அதேபோல் 2019ம் ஆண்டு சந்தா பதிவு,  மாவட்ட பேரவைகூட்டம், கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் ஆகியவை முன்னெடுப்பது, 2019ம் ஆண்டு சந்தாவை மார்ச் 15ம் தேதிக்குள் முடித்துக் கொடுப்பது நீடாமங்கலத்தில் நடைபெறும் மாவட்ட பேரவை கூட்டத்தில் முத்துப்பேட்டை ஒன்றியத்திலிருந்து அனைத்து   பணியாளர்களும்  கலந்து கொள்வது, திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் 22ம் தேதி நடக்கும் போராட்டத்தில் அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றிய பொருளாளர் ஐயப்பன், சங்க நிர்வாகிகள் சற்குணம், கணேசன், சிவசுப்பிரமணியன் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags : Village Panchayat ,office ,Thiruvarur Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...