×

மகாதேவப்பட்டிணம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

மன்னார்குடி, பிப். 14: மகாதேவப்பட்டிணம்  அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு  எழுதும் 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி அருகே உள்ள மகாதேவப் பட்டிணம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில்  பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு  மாணவர்களுக்கு தேர்வை எதிர் கொள்வது குறித்த தன்னம்பிக்கை பயிற்சி முகாம்  நேற்று நடைபெற்றது முகாமிற்கு  பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.பட்டதாரி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்  பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சிடிக்களை பயன் படுத்தி பொதுத் தேர்வை எழுதுவது குறித்த விளக்கங்களை மாணவர்களுக்கு  அளித்ததோடு தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதுவதற்குரிய பயிற்சி களையும்  அளித்தார்.மாவர்களுக்கான பயிற்சி வகுப்பை திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயா ஆய்வு செய்தார்முகாமில் ஆசிரியர்கள் சோமசுந்தரம், கார்த்திகேயன், பாண்டியன்,  இன்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : training camp ,Mahadevapatnam Government School ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்