×

காடுவெட்டி அரசு பள்ளிக்கு கல்விசீர் வழங்கும் விழா

முத்துப்பேட்டை, பிப்.14:  காடுவெட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் -காடுவெட்டி அரசு நடுநிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கல்வி சீர்வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். சீர்வரிசை ஊர்வலத்தை பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் ரூ. 54ஆயிரம் மதிப்புள்ள கல்வி உபகரணங்கள், நாற்காலிகள், மேஜை, எவர்சில்வர் குடங்கள், கடிகாரங்கள், ஸ்டூல், பேன், பீரோ, குத்துவிளக்குகள் ஆகியவற்றை பள்ளிக்கு சீர்வரிசை பொருளாக பெற்றோர்கள் வழங்கினர். இதனை தலைமை ஆசிரியர் முருகேசன் பெற்றுக்கொண்டார். இதில், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா, ஆசிரியர் பயிற்றுநர் சக்திவிநாயகம், பெற்றோர்ஆசிரியர்கழக பொருளாளர் இளம்பரிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர்அருளானந்தம் வரவேற்றார்.  முடிவில் ஆசிரியர் துரைராசு நன்றி கூறினார்.

Tags : ceremony ,Cadeweddy Government School ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா