×

சமூக வலைதளங்களை மாணவர்கள் கவனமுடன் கையாள வேண்டும் நீதிபதி அறிவுறுத்தல்

திருவாரூர், பிப் 14: சமூக வலைத்தளங்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதால் அதனை மாணவர்கள் கவனமுடன் கையாள வேண்டும் என நீதிபதி ஜெகதீசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே இயங்கி வரும்  தனியார் மேல்நிலைப் பள்ளியில் நன்னிலம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் வெற்றிச்செல்வன் தலைமையிலும், இயக்குனர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் நன்னிலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன்  பேசுகையில், சாலை விதிகளை கடைபிடிப்பது மற்றும் அது குறித்து சட்ட விதிகள், பெண்களுக்கான பாலியல் வன்முறைகள் மற்றும் அது குறித்து சட்ட விதிகள் மற்றும் சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி பேசியதுடன்  சமூக வலைதளங்களால் பல்வேறு நேரங்களில் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுவதால் அதனை  மாணவ, மாணவிகள் கவனமுடன் கையாள வேண்டும்  என்றார். முகாமில் வழக்கறிஞர்கள் வீரமணி,  தெய்வீகன், பழனிராஜா, சுரேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டு பேசினர்.

Tags : judge ,
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...