×

ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு தொழிலாளி கைது

தூத்துக்குடி, பிப். 14: தூத்துக்குடியில் ஆட்டோர டிரைவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்தவர் பிரபாத் (30). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் ஜார்ஜ் ரோடு பகுதியில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இதே பகுதியை சேர்ந்த பிரவீன் (31) என்பவர், எங்க ஏரியாவிற்குள் நீ எப்படி வரலாம் என்று கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரமடைந்து பிரபாத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரபாத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து பிரவீனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : auto driver ,sickle cut worker ,
× RELATED குன்றத்தூர் அருகே லோடு ஆட்டோ டிரைவர்...