×

தீக்குளித்த தொழிலாளி பரிதாப சாவு

பண்ருட்டி, பிப். 14:   பண்ருட்டி அருகே மானாடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு மகன் தாமோதரன் (45), கூலி தொழிலாளி. இவரது மனைவி சரளா (35). தாமோதரன் தினமும் இரவில் குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதையடுத்து தம்பதியர் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 7ம்தேதி வழக்கம்போல் தாமோதரன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி கண்டித்துள்ளார். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டதால் தாமோதரன் விளையாட்டுத்தனமாக தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.  இதில் உடல் கருகிய அவரை உறவினர்கள் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தாமோதரன் இறந்தார். இதுபற்றி அவரது மனைவி சரளா முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : fireside worker ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்