×

துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி

சிதம்பரம், பிப். 14: நகராட்சி நிர்வாக ஆணையரகம் சார்பில் தமிழ்நாடு நீடித்த நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடந்தது. சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட 4 நகராட்சிகளை சேர்ந்த 60 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி முகாமிற்கு சிதம்பரம் நகராட்சி மேலாளர் (பொறுப்பு) காதர்கான் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சிதம்பரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷோபினி, சிதம்பரம் நகராட்சி சுகாதார அலுவலர்கள் பால்டேவிஸ், தர்மராஜ், சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கருணாநிதி, சுகாதார மேற்பார்வையாளர்கள் ஹரிகிருஷ்ணன், ராமானுஜம் ஆகியோர் சுகாதாரம் குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல் குறித்தும், மருத்துவ குப்பைகளை கையாளும் முறைகள் குறித்தும் பயிற்சி அளித்தனர்.


Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது