×

வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை 8 பேர் மீது வழக்கு: கணவன் அதிரடி கைது

திருக்கோவிலூர், பிப். 14: சங்கராபுரம் வட்டம் மைக்கேல்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சவரிமுத்து(35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பரிமளாமேரி(24) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணத்தின் போது பரிமளாதேவியின் பெற்றோர் வீட்டில் 7 சவரன் நகையும், ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கினர். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சவரிமுத்துவும், அவரது குடும்பத்தினரும் பரிமளாதேவியிடம் தாய் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

இதனிடையே சம்பவத்தன்று கணவர் குடும்பத்தினர் மீண்டும் ரூ.3 லட்சம் ரொக்கம் வரதட்சணை வாங்கி வரவேண்டும் என்று கூறி அவரை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பரிமளாதேவி, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் கணவர் சவரிமுத்து, மாமனார் எரோனிமூஸ், மாமியார் ரீத்தாமேரி, கணவரின் சகோதரிகள் விமலாராணி, அமலோற்பவமேரி, அருள்ஜோதி, ஆரோக்கியமேரி மற்றும் செட்ராஜ் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, அதில் சவரிமுத்துவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : teenager ,
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை