×

பாலீஷ் போடுவதாக கூறி மூதாட்டியிடம் நகை அபேஸ்

ராஜபாளையம், பிப். 13: ராஜபாளையத்தை சேர்ந்த மூதாட்டியிடம் நகை பாலீஷ் செய்வதாக கூறி, மோதிரம் மற்றும் வளையல்களை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராஜபாளையம் மூதனூர் தெருவைச் சேர்ந்தவர் ஜனகராஜ். இவரது மனைவி ரத்தினம்மாள் (62). இவர், தனியாக வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத 2 பேர் வந்து, அவரிடம் நகைகளை பாலீஷ் செய்து தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ரத்தினம்மாள் தான் அணிந்திருந்த மோதிரம் மற்றும் எட்டு தங்க வளையல்களை கழற்றி கொடுத்துள்ளார்.நகைகளை வாங்கிய இருவரும், பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் நகைகளை போட்டுள்ளனர். பின்னர் மஞ்சள் நிற பொடியைப் போட்டு சூடு ஏற்றினர். பின்னர், சூடு ஆறிய பின்னர் பாத்திரத்தில் நகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி சென்றுவிட்டனர். சூடு ஆறிய பின் பாத்திரத்தில் மோதிரம் மற்றும் வளையல்களை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ரத்தினம்மாள் வெளியே சென்று பார்த்தபோது, அவர்களை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்கு பதிவு செய்து நகைகளை அபேஸ் செய்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : jeweler ,
× RELATED ஆவடி நகைக்கடை கொள்ளை: 8 தனிப்படைகள் அமைப்பு!