×

திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு ‘குடிமகன்கள்’ ஓய்வறையாக மாறிய பயணிகள் நிழற்குடை

சின்னமனூர், பிப். 13: சின்னமனூரில் பயணிகள் நிழற்குடை ‘குடிமகன்களின்’ ஓய்வறையாக மாறியதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவில் காந்தி சிலை அருகே தேனி மற்றும் போடிக்கு செல்லும் பஸ் ஸ்டாப் நிழற்குடைகள் உள்ளன. தேனி மற்றும் போடிக்கு செல்லும் பயணிகள் இந்த நிழற்குடைகளில் அமர்ந்து பஸ்களுக்காக காத்திருப்பர். இந்நிலையில் சில மாதங்களாக இந்த நிழற்குடையை மறைத்து பேனர்கள் வைக்கப்படுகின்றன. நிழற்குடைகள் முழுவதும் மறைக்கப்படுவதால் பயன்பாடின்றி உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த ‘குடிமகன்கள்’ சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.மது அருந்திய ‘குடிமகன்கள்’ ஓய்வெடுக்கும் அறையாக இந்த நிழற்குடையை பயன்படுத்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் பஸ்சுக்காக கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள் அச்சத்துடன் நிற்க வேண்டியுள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி, நிழற்குடையில் குடிமகன்கள் ஓய்வெடுப்பதை தடுக்க வேண்டும். நிழற்குடையை மறைத்து பேனர்கள் கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : meeting ,DMK ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...